ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் இப்ராயிம் மொஹமட் நவுஃபருடன், தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் தொடர்பில், புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
பல வருடங்களாக மொஹமட் இப்ராயிம் மொஹமட் நவுஃபர், கட்டாரில் தங்கியிருந்ததாகவும், இந்த நபருடன் கட்டார் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் யார் என்பது தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
2016ம் ஆண்டு முதல் மொஹமட் நவுஃபர், அபுபக்கர் அல் பெக்டாட்டடின் கொள்கைகளை, சஹரான் பின்பற்றுவதற்கு குறிப்பிடத்தக்களவு பொறுப்பாக இருந்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
சஹரானுடன் தொடர்புகளை பேணி, ஈஸ்டர் தாக்குதலை குறித்த சந்தேகநபர் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார். (MAWBIMA)
Discussion about this post