இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634ஆக உயர்வடைந்துள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்ட கொவிட் 2வது அலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது.
கொவிட் முதலாவது அலையில் 13 பேர் மாத்திரமே உயிரிழந்ததாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், உயிரிழந்தோரின் வயதெல்லை தொடர்பிலான தகவல்களை கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டது.
இதன்படி, கொவிட் 2வது அலையில், கொவிட் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்தோரில் அதிக எண்ணிக்கையிலானோர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொவிட் 2வது அலையினால் 71 வயதுக்கு மேற்பட்ட 300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். (TrueCeylon)
வயதெல்லை | உயிரிழப்பு |
0 – 9 | 1 (0.16%) |
10 – 30 | 9 (1.44%) |
31 – 40 | 16 (2.57%) |
41 – 50 | 49 (7.89%) |
51 – 60 | 87 (14.00%) |
61 – 70 | 160 (25.76%) |
71 வயதுக்கு மேற்பட்டவர்கள் | 300 (48.30%) |
Discussion about this post