தெமட்டகொட பகுதியில் ஆபத்தான டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு வெளியே வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆய்வுக் குழு இன்று (18) சுகாதார அமைச்சகத்தில் ஒன்று கூடி நீண்ட விவாதத்திற்குப் பின் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
அந்த பகுதிகளை தனிமைப்படுத்தி, டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க ஏனையோரின் மாதிரிகளை எடுத்துக் கொள்ளுதல்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணித்து ஆய்வு செய்தல்.
இந்த டெல்டா விகாரங்கள் நாட்டின் பிற பகுதிகளில் அதிகமாக உள்ளதா என்பதை சோதனை செய்ய சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனைகளுக்குத் தேவையான அனைத்து பௌதீக மற்றும் மனித வளங்களையும் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post