சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது.
இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த உதவித்திட்டம் வழங்கப்படுவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிடுகின்றது. (TrueCeylon)
China Development Bank and Sri Lankan Government has entered into an agreement of RMB 2 Billion (approx LKR 61.5 Billion) Term Facility today (17 Aug), upon a request from 🇱🇰 side to support its #COVID19 response, economic revival, financial stability and livelihood betterment. pic.twitter.com/ehkvWGfXzz
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) August 17, 2021
Discussion about this post