சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீள திரும்புவதற்காக விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
இன்று (15) முதல் இந்த விசேட போக்குவரத்து வசதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறுகின்றார்.
தற்போது சேவையிலுள்ள பஸ்களுக்கு மேலதிகமாக, சுமார் 3000 பஸ்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பிலிருந்து, ஏனைய பகுதிகளுக்கு சென்ற பஸ்கள், இன்று முதல் குறித்த இடங்களிலிருந்து மீள கொழும்பிற்கு பயணத்தை ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தவிர, மேலதிகமாக 21 ரயில்களும், மேலதிகமாக 58 ரயில் போக்குவரத்து சேவைகளும் ஏப்ரல் 9ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post