ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்று கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுடன் பிரத்தியேக சந்திப்புக்களை கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் நடத்தியிருந்தார்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார். (TrueCeylon)