எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி வரை கொழும்பு வான் பரப்பில் பட்டங்கள் மற்றும் ட்ரோன் கமராக்களை பறக்க விட வேண்டாம் என விமானப்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்விற்கான பயிற்சிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதற்கான கொழும்பு வான் பரப்பில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக விமானப்படை தெரிவிக்கின்றது.
இவ்வாறு பயிற்சிகளில் ஈடுபடும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பயணிக்கின்றமையினால், 4ம் திகதி வரை பட்டங்கள் மற்றும் ட்ரோன் கமராக்களை பறக்கவிட வேண்டாம் என விமானப்படை கோரிக்கை விடுக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post