கொரோனா வைரஸ், கடுமையாக தாக்கும் பட்சத்தில், நாட்டின் பொருளாதாரம் முழுமையாகவே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் சுசி பெரோரா தெரிவித்துள்ளார்.
தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இந்த எச்சரிக்கை விடுக்கின்றார்.
கொவிட் தொற்று பரவும் பிரதான குழாய் அடைக்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
அதைவிடுத்து, இலங்கை போன்ற நாடொன்றினால், சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதனால், கொவிட் தொற்று பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றார்.
இதேவேளை, இலங்கையில் கொவிட் மூன்றாவது அலை பரவ ஆரம்பித்துள்ள தருணத்தில் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பத்மா எஸ். குணரத்ன தெரிவிக்கின்றார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை, தாம் மிகவும் அபாயகரமான நிலைமையாகவே கருதுவதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த அபாய நிலைமை தொடர்பில், அரசாங்கத்திலுள்ள உயர்மட்டத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். (ADA DERANA)
Discussion about this post