கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பிரதேசத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரு கற்பாறைகளுக்கு இடையிலிருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
45 வயதான ஆணொருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (TrueCeylon)