Sunday, February 5, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

மின்சாரத்தை எப்போது வரை தடையின்றி வழங்க முடியும்? – மனம் திறந்தார் அமைச்சர்

ரக்சிகன் by ரக்சிகன்
January 16, 2022
in இலங்கை, பிரதான செய்தி
Reading Time: 1 min read
மின்சாரத்தை எப்போது வரை தடையின்றி வழங்க முடியும்? – மனம் திறந்தார் அமைச்சர்
417
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
ADVERTISEMENT

நாடு முழுவதும் நாளை மறுதினம் (18) வரை மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திற்கு 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த 3000 மெற்றிக் தொன் டீசலின் ஊடாக, எதிர்வரும் 18ம் திகதி வரை நாடு முழுவதும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை தமக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்குடன், வலுசக்தி அமைச்சுடன் நாளைய தினம் (17) கலந்துரையாடல்களை நடத்த, தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார்.

கொவிட் நிலைமைக்கு மத்தியில், மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கு மக்களுக்கு நிவாரண காலம் அறிவிக்கப்பட்டமையினால், தமக்கு 44 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறு மின்சார பயன்பாட்டாளர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகையை, தாம் தற்போது அறவிட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 300 மெகா வோர்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மூன்று கட்டமைப்பு செயற்பட்டு வருவதாகவும், அதில் ஒரு கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டதாகவும் அமைச்சர் நினைவூட்டினார்.

இவ்வாறு செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை, எதிர்வரும் 22ம் திகதி வழமைக்கு கொண்டு வர முடியும் என பொறியியலாளர்கள் தமக்கு உறுதியளித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதேவேளை, வறட்சி காலங்களில் நீர் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக, மின்சாரத்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் 22ம் திகதி வரை வலுசக்தி அமைச்சு, தமக்கு தேவையான எரிபொருளை வழங்காத பட்சத்தில், மின் விநியோக தடை ஏற்படுத்தப்படுவது குறித்து தீர்மானமொன்றை எட்டுவதற்கான நிலைமை தமக்கு ஏற்படும் எனவும் அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிடுகின்றார். (TrueCeylon)

Tags: #அமைச்சர்அமைச்சர் சமல் ராஜபக்ஸஎரிபொருள்காமினி லொக்குகேகொவிட்கொவிட் 19கொவிட்−19சமல் ராஜபக்ஸவலுசக்தி அமைச்சு
Previous Post

“4 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுங்கள்”

Next Post

“உலக, பிராந்திய மோதலில், இலங்கைக்கு முக்கிய இடம்”- வர்த்தக வல்லுநர்கள் கருத்து (VIDEO)

Next Post
“உலக, பிராந்திய மோதலில், இலங்கைக்கு முக்கிய இடம்”- வர்த்தக வல்லுநர்கள் கருத்து (VIDEO)

"உலக, பிராந்திய மோதலில், இலங்கைக்கு முக்கிய இடம்''- வர்த்தக வல்லுநர்கள் கருத்து (VIDEO)

Flash News

  • அரச ஊழியர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த தடையா?

    கையடக்கத் தொலைபேசிகளுக்கு கடுமையான சட்டம் l காரணம் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- பெட்ரோல் விலை சடுதியாக அதிகரிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • அரச ஊழியர்கள் குறித்து அரசு அதிரடி தீர்மானம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நீச்சல் தடாகத்தில் கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் சடலம் – வெளியான தகவல்கள் (முழு விபரம் இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • 2022 (2023) G.C.E (O/L) பரீட்சார்த்திகளுக்கு இன்று முதல் புதிய வழிமுறை ஆரம்பம் l 28ம் திகதி வரை மாத்திரமே

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved