பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் குடும்பத்திற்கு தமது அரசாங்கம் நட்டஈடு வழங்கும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹிரு தொலைகாட்சியுடனான விசேட நேர்காணலில், பாகிஸ்தான் தகவல் தொடர்பாடல் அமைச்சரும், அரசாங்க ஊடகப் பேச்சாளருமான பவாத் செளத்திரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)