கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ள சென்ற வேளையிலேயே, அந்த நாட்டிலுள்ள தமிழர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியிடப்பட்ட எதிர்ப்பை அடுத்து, அங்கு அமைதியிண்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். (TrueCeylon)
https://youtu.be/rNiCezxrYdo