நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி, எதிர்வரும் ஆண்டு ஆரம்பம் முதல் நாடு முழுமையாக திறக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலபிட்டி பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டின் வருமானமும் முழுமையாக இல்லாது போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், நாட்டிலுள்ள பெரும்பாலானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறான தடைகள் வந்தாலும், பொருளாதார ரீதியில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார். (TrueCeylon)