பென்டோரா ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்களில், இலங்கை அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்கு உள்ளக விசாரணைகளை ஆரம்பிப்பது அத்தியாவசியம் என ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் கோரியுள்ளது.
அறிக்கையொன்றின் ஊடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பென்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.
அத்துடன், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு வெளியக அழுத்தங்கள் இல்லாது, விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது. (TrueCeylon)