இலங்கை : கடந்த 3 வருட காலப் பகுதியில் பெற்றோருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களினால் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, குறித்த காலப் பகுதியில் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 குழந்தைகள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், 2020ம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
சிறுவர் பணியாளர்கள் தொடர்பிலேயே அதிகளவிலான தகவல்கள் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு அந்த தொகை 2 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post