சவூதி அரேபியா அபா விமான நிலையத்தின் மீது ட்ரோன் விமானத்தின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானமொன்றும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது தாக்குதலை நடத்துவதற்காக வந்த ட்ரோன், சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Discussion about this post