தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அகதிகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஸ நேற்று பதிவிட்ட டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு மனோ கணேசன், நாமல் ராஜபக்ஸவிடம் கோரியுள்ளார். (TrueCeylon)
தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், இன்றும் யாழில், பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள். வலி-வடக்கில் பலாலி உட்பட்ட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம்மக்களை தம் சொந்த நிலங்களுக்கு போக விடுங்கள். @RajapaksaNamal @mkstalin https://t.co/SPYYWzTiPp
— Mano Ganesan (@ManoGanesan) August 29, 2021
Discussion about this post