இரண்டாம் இணைப்பு
கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோருடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட நிலையிலேயே, அவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதேவேளை, குறித்த சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு அருகில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகபெரும மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரே அமர்ந்துள்ளமையை காண முடிகின்றது.
முதலாம் இணைப்பு
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தனது அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தான் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தியதில் தனக்கும் கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)
Discussion about this post