இரண்டாம் இணைப்பு
நாட்டை இன்றிரவு 10 மணி முதல் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை நாட்டை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதன்படி, அத்தியாவசிய சேவைகளை தவிர, ஏனைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படவுள்ளன.
Nationwide Lockdown in effect from 10pm today (20/08) to Monday (30/08). All essential services will function as normal. I sincerely request all #lka citizens to adhere to the law and #StayHome
— Keheliya Rambukwella (@Keheliya_R) August 20, 2021
முதலாம் இணைப்பு
கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு ஒரு வார காலத்திற்கேனும், நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.
நாடு முடக்கப்படுகின்றமை தொடர்பில் ஜனாதிபதி தனது விசேட உரையில் கருத்து தெரிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post