ஹம்பாந்தோட்டை − சூரியவெவ பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சூரியவெவ − வெவேகம பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக வெவேகம பகுதிக்கு இன்று (17) பிற்பகல் சென்ற பொலிஸார் மீது, சிலர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதையடுத்து, பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சந்தேகநபர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்த சந்தேகநபர்கள் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொலிஸ் ஜுப் வண்டி, வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து, சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்காபரண கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக சென்ற வேளையிலேயே, பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (TrueCeylon)
Discussion about this post