ஹெய்டியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,297ஆக அதிகரித்துள்ளது.
ஹெய்டியின் கரேபியன் பகுதியில் கடந்த சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகினது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அன்றைய தினம் 304 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் பெருமளவானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் 5,700ற்கும் அதிகமானோர் காயமடைந்து, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், பாடசாலைகள் என அனைத்து கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post