கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் திருமண நிகழ்வுகள், செயலமர்வுகள் உள்ளிட்ட மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த இன்று (16) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எனினும், பதிவு திருமணத்தை நடத்துவதற்கு தடை கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டிலோ அல்லது வேறொரு இடத்திலோ பதிவு திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பதிவு திருமணத்திற்காக திருமண தம்பதி, இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர், திருமண பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
இவர்களை தவிர, வேறு எந்தவொரு தரப்பிற்கும் பதிவு திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள அனுமதி கிடையாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post