Friday, September 22, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home Breaking News

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் என தகவல் − ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

admin by admin
August 12, 2021
in Breaking News, இலங்கை
Reading Time: 1 min read
241
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

Notice: Trying to get property 'end' of non-object in /home/trueceylon/public_html/wp-content/themes/jnews/class/ContentTag.php on line 36

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனரான ஷியாப்தீன் இஷ்மத்தை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16ம் திகதி முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (11) விடயங்களை தெளிவூட்டியிருந்தனர்.

2016ம் ஆண்டு வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட குறித்த சிறுமி, சந்தேகநபரினால் இரு வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சிறுமியை ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் கறுவாத்தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் வைத்து இரண்டாவது முறை துஷ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் “மேடம்” யிடம் கூறிய போதிலும், அது பலனலிக்கவில்லை எனவும், பின்னர் தான் அந்த வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண், முறைபாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

டயகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பொலிஸாரினால் நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவூட்டப்பட்டதன் பின்னரே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஹிஷாலினியின் உயிரிழப்பை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மைத்துனரான ஷியாப்தீன் இஷ்மத் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி தொடர்பிலான வைத்திய பரிசோதனை அறிக்கையை, நீதிமன்றத்திற்கு சமர்பிக்குமாறும் நீதவான் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். (TrueCeylon)

Previous Post

அதிபர்−ஆசிரியர் சம்பள பிரச்சினை − இன்று ஆரம்பமாகும் முதற்கட்ட பேச்சு

Next Post

4 இணையத்தளங்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Next Post

4 இணையத்தளங்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Discussion about this post

Flash News

  • விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    விஜய் அன்டனியின் மகள் உயிரிழப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கையில் விருது வழங்கும் மாஃபியா – சிக்கிய அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிய கிண்ண இறுதி போட்டி l இறுதி தருணத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • 10 ஆசிரியர்களுக்கு திடீர் இடமாற்றம்! காரணம் என்ன?

    0 shares
    Share 0 Tweet 0
  • நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved