இலங்கையில் மேலும் 4 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251ஆக அதிகரித்துள்ளது.
தும்பலசூரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரும், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஒருவரும், காலி பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஒருவரும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நால்வரும் ஆண்கள் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. (TrueCeylon)
Discussion about this post