மேல் மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அடுத்தப்படியாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் 322 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குருவிட்ட பகுதியில் 88 தொற்றாளர்களும், கொலன்ன பகுதியில் 63 தொற்றாளர்களும், இரத்தினபுரி பகுதியில் 50 தொற்றாளர்களும், எஹலியகொட பகுதியில் 41 தொற்றாளர்களும், இறக்குவானை பகுதியில் 35 தொற்றாளர்களும், பலாங்கொட பகுதியில் 25 தொற்றாளரும் நேற்று பதிவாகியுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post