நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் கைதான முதலாவது சந்தர்ப்பம் இதுவென அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலம் வரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 31,395 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post