எரிப்பொருள் விலையேற்றத்துடன், அனைத்து பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
நாட்டிலுள்ள சில பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளுக்கான விலைகளை தற்போதே அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவிக்கின்றார்.
எரிப்பொருள் விலை மாத்திரமன்றி, பேக்கரி உற்பத்திக்கு தேவையான சில பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, கோதுமை மாவின் விலையும் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எரிப்பொருள் விலையேற்றத்துடன், 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், கொவிட் பரவலுக்கு மத்தியில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை அழைத்து செல்ல வேண்டுமாக இருந்தால், 15 வீத பஸ் கட்டண அதிகரிப்பு போதாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில், ஆகக் குறைந்தது 25 வீத கட்டண அதிகரிப்பையேனும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணங்களிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றங்களை ஏற்படுத்த கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)
Discussion about this post