குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, பணம் பறிக்கும் மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், குறித்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்திற்கான பயண செலவை வைப்பிலிட வேண்டும் என குறித்த மோசடியாளர்கள் கோருகின்றனர்.
இல்லாவிடின், குறித்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகைத்தரவேண்டும் என்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமாற வேண்டாம் என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post