நாட்டை முழுமையாக 14 நாட்களுக்கு முடக்குமாறு ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய் தடுப்பு மற்றும் கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர், கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.
கொவிட் வைரஸ் பரலை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக 14 நாட்கள் நாடு முடக்கப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் இந்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
Discussion about this post