மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சரியான சூழ்நிலை நாட்டில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நாட்டில் கொவிட் வைரஸ் மிக வேகமாக பரவுகின்றமையினால், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சரியான விடயம் அல்லவென கட்சித் தலைவர்கள், இதன்போது கூறியுள்ளனர்.
அதேவேளை, தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையிலோ அல்லது தொகுதிவாரி முறையிலோ நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால், எல்லை நிர்ணய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.
Discussion about this post