இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்புக்கான தடுப்பூசி இலங்கைக்கு சற்றுமுன் கொண்டுவரப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றிய விசேட விமானம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நாட்டை வந்தடையுந்துள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா சேனேகா கொவிசீல்ட் தடுப்பு மருந்தை இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 281 என்ற விமானத்தின் மூலம் இந்த மருந்து தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
1323 கிலோகிராம் எடையுடைய இந்த மருந்து தொகை, அதி குளிரூட்டப்பட்ட கட்டமைப்பில் வைத்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Oxford AstraZeneca’s COVISHIED என்றழைக்கப்படும் கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான 5 இலட்சம் தடுப்பூசிகள் இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளன.(Trueceylon)
Discussion about this post