Thursday, August 18, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home இலங்கை

100 கோடி பெறுமதியான ஹெரோயின் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? – முழுமையான தகவல்

November 21, 2020
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
238
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

வெலிகம – மோதர பகுதியில் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்த மோட்டார் வாகனமொன்றையும், 100 கிலோகிராம் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமையவே, இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு – கொட்டிகாவத்தை பகுதியிலிருந்து சொகுசு வாகனமொன்றில் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக, மோதர பகுதிக்கு நபர் ஒருவர் வருகைத் தந்துள்ளதாக விசேட அதிரடி படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியை சுற்றி வளைத்த விசேட அதிரடி படையினர், சொகுசு வாகனமொன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குறித்த வாகனத்திலிருந்து 25 கிலோகிராம் போதைப்பொருளை கைப்பற்ற முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இந்த வாகனத்தில் பயணித்த மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 கிலோகிராம் போதைப்பொருளை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாலியை நோக்கி தப்பிச் சென்றுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ரத்கம விதுர என்ற நபருக்கு சொந்தமான போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

குறித்த போதைப்பொருள், கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் கொழும்பு – கொட்டிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: அஜித் ரோஹணஇத்தாலிகொட்டிகாவத்தைகொழும்புபிரதி பொலிஸ் மாஅதிபர்பொலிஸ் ஊடகப் பேச்சாளர்போதைப்பொருள்மோதரவெலிகமஹெரோயின்
Previous Post

இலங்கையில் கொவிட் உயிரிழப்பு மேலும் அதிகரித்தது.

Next Post

இலங்கையில் கஞ்சா செய்கை அங்கீகரிக்கப்படுமா?

Next Post

இலங்கையில் கஞ்சா செய்கை அங்கீகரிக்கப்படுமா?

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022

Recent News

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

தாய்லாந்தின் 17 இடங்களில் தொடர் தாக்குதல்

August 17, 2022
670
லிட்ரோ நிறுவனத்திற்கு ஜனாதிபதி அதிரடி விஜயம் l லிட்ரோ தலைமை பதவியில் திடீர் மாற்றம்

இலங்கை வருகின்றார் கோட்டாபய ராஜபக்ஸ

August 17, 2022
572
இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

இலங்கையில் ‘பரந்துபட்டளவில் கொத்தடிமைத்தனம்’ : ஐ.நா ஆழ்ந்த கவலை

August 17, 2022
405
மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

மன்னார், பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனத்தின் மின் திட்டத்திற்கு அனுமதி

August 17, 2022
322
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved