இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடும் மழையுடனான வானிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு சொந்தமான, 71 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
54, 126 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 19 ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
Discussion about this post