இலங்கை : பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட ஐந்து பேர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (13) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்வதாக சட்ட மாஅதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியா தேவாலயத்தில் மத வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post