தனது வலது கையிலுள்ள விரல்களை இழந்து நிலையில், இடது கையில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றி, சாதனை படைத்த மாணவன் குறித்து ட்ரு சிலோன் ஆராய்கின்றது.
வலது கையிலுள்ள விரல்களை இழந்து நிலையில், ஆசிரியரின் வழிக்காட்டலின் கீழ் இந்த மாணவன் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
விபத்தொன்றினால் இந்த மாணவன் தனது விரல்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் – அனகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே இந்த சாதனையை படைத்துள்ளான்.
புத்தளம் – மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த ஷெவான் சஞ்ஜீவவிற்கு, 2017ஆம் ஆண்டு இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் சந்தர்ப்பத்தில் இயந்திரமொன்றிற்குள் சிக்குண்டு, தனது விரல்களை இழந்துள்ளார்.
அதுவரை வலது கை பழக்கத்தை கொண்டிருந்த சஞ்ஜீவவிற்கு, விபத்தின் பின்னர் கல்வியில் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.
இவ்வாறான நிலையில், 4ஆம் தரத்தில் 2019ஆம் ஆண்டு குறித்த சிறுவன் இணைந்துள்ளார்.
வகுப்பாசிரியர் பிரதீப் புஷ்பகுமாரவின் வழிகாட்டலின் கீழ் இந்த மாணவன் அன்று முதல் தனது கல்வியை தொடர்கின்றார்.
இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்து, தனது கல்வியை தொடர்ந்துள்ளான் இந்த மாணவன்.
இவ்வாறு கல்வி பயின்ற சஞ்ஜீவ, புலமை பரிசில் பரீட்சையில் 170 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
விசேட தேவையுடைய மாணவன் என்பதை பொருட்படுத்தாது, சாதனை படைத்துள்ள இந்த மாணவன், அனைவருக்கும் முன்னுதாரணமே