பண்டிகை காலங்களில் மேல்மாகாணத்திற்கு வெளியே கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான மீள் அறிவிப்பு வரும் வரை, இன்று (18) காலை 8.00 மணி முதல் மேல்மாகாணத்தின் எல்லைகளைக் கடக்கும் பயணிகள் மீது விரைவான ஆன்டிஜென் சோதனைகள் (RAT) நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாணத்தின் மூன்று இடங்களில் பயணிகளின் மீது பரிசோதனைகள் , மேற்கொள்ளப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் இயக்குநர் தெரிவித்துள்ளார் .
ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ள சுகாதார இயக்குநர்கள் தங்கள் குழுக்களை பின்வரும் இடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
- கண்டி – கொழும்பு வீதியில் நிட்டம்புவ
- அவிசாவெல – கொழும்பு வீதியில் சலாவ , கொஸ்கம
- கொழும்பு – சிலாபம் வீதியில் கடுநாயக்க
பண்டிகை காலங்களில் குறிப்பாக மலையகப் பகுதிகளுக்கு பயணிக்கும் மக்களை இலக்காகக் கொண்டு RAT நடத்தப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .(Trueceylon)