பேலியகொட புதிய மெனிங் சந்தை கட்டிடத் தொகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 30ம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளிலேயே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேலியகொட நகர பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேலியகொட புதிய மெனிங் சந்தையிலுள்ள வர்த்தகர்கள், ஊழியர்கள், நுகர்வோர் உள்ளிட்ட 112 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post