இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் அறிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகம் ஊடாக, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உச்ச நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.
பேரறிவாளனின் கருணை மனு மீது தீர்மானம் எட்டப்படுவது தாமதமாவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post