தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பிலோ அல்லது அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் தொடர்பிலோ புகழாரம் சூட்டும் வகையில் பாராளுமன்றத்திற்குள் கருத்துரைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு வர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக காணப்படுகின்ற நிலையில், அந்த அமைப்பு மற்றும் அதன் தலைவர் குறித்து சில பாராளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் புகழாரம் சூட்டும் வகையில் கருத்துரைக்கின்ற பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜேர்மன் பாராளுமன்றத்திற்குள் ஹிட்லர் தொடர்பில் கருத்துரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை, இதற்கு சிறந்த உதாரணம் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இலங்கையில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்த பிரபாகரன் மற்றும் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து, உயரிய பீடமான பாராளுமன்றத்திற்குள் சிலர் புகழாரம் சூட்டும் வகையில் கருத்து வெளியிடுகின்றமை கவலைக்குரிய விடயம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post