கொவிட் – 19 தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட நாள் முதல் கடந்த நவம்பர் மாதம் இறுதியான வரையான காலம் வரை நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 1900 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப் பகுதியிலேயே இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களாக நாளாந்தம் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
வாகன சாரதிகளின் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். (TrueCeylon)
News Source :- News Wire