கொவிட் தொற்று காரணமாக தெற்காசிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடு மற்றும் மிகவும் ஆபத்தான நாடுகள் தொடர்பில் ட்ரூ சிலோன் ஆராய்ந்தது.
தெற்காசியாவில் மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பதிவாகின்றது.
இந்தியாவில் கொவிட் தொற்று காரணமாக 8,684,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 128,165 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பங்களதேஷிலேயே அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
பங்களதேஷில் 425,353 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,127 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
பங்கதேஷிற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அதிக பாதிப்புக்களை கொண்ட நாடாக காணப்படுகின்றது.
பாகிஸ்தானில் கொவிட் தொற்று காரணமாக 349,992 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 7,055 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் கொவிட் தொற்றினால் 202,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,174 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்திற்கு அடுத்ததாக மாலைத்தீவு அதிக அச்சுறுத்தலை கொண்ட நாடாக பதிவாகின்றது.
மாலைத்தீவில் 42,872 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 302 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இதுவரையான காலம் வரை 42,609 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அங்கு 1,581 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு அடுத்ததாக இலங்கை பதிவாகின்றது.
இலங்கையில் இறுதியாக வெளியான தரவுகளின் அடிப்படையில், கொவிட் தொற்றினால் 15,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 46 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது,
இலங்கைக்கு அடுத்ததாகவே பூட்டான் காணப்படுகின்றது.
பூட்டானில் 364 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே இதுவரை பதிவாகியுள்ளதுடன், அங்கு உயிரிழப்புக்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என சர்வதேச கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் இணையத்தளம் குறிப்பிடுகின்றது.
இதன் அடிப்படையில் தெற்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடாக பூட்டான் பதிவாகும் அதேவேளை, அதிக அச்சுறுத்தல் கொண்ட நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.