வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத் தந்த 69 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்தோருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாகவே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தென் சூடானிலிருந்து வருகைத் தந்த 41 பேருக்கும், ஓமானிலிருந்து வருகைத் தந்த 11 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத் தந்த 10 பேருக்கும், இந்தியா, மாலைத்தீவு மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்த தலா ஒவ்வொருவருக்கும் கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 538 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)