திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ள சீமெந்து ஏற்றிய கப்பலை மீட்கும் பணிகளை கண்காணிப்பதற்காக கடற்படை, துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் கப்பல்களும், விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த கப்பல் திருகோணமலையை அண்மித்த கடற்பரப்பில் நேற்று தரை தட்டியது.
குறித்த கப்பல் தரை தட்டிய விதம் மற்றும் கப்பலின் தற்போதைய நிலைமை குறித்து கடற்படையின் சுழியோடிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
குறித்த கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)
Discussion about this post