இலங்கை : தனி சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 12 இளைஞர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை – வீரசிங்க மாவத்தை பகுதியிலேயே இவர்கள் மோட்டார் சைக்கிள்களை தனி சக்கரத்தில் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் போது 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
கல்கிஸ்ஸை, பாணந்துரை, கொஹ{வல, மொரட்டுமுல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (TrueCeylon)
Discussion about this post