குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமொன்றை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு மாநகர எல்லைக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
முத்துராஜவெல பகுதியில் 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்சார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் நாளொன்றில் 700 தொன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்தே, மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த திட்டத்தின் ஊடாக குப்பை பிரச்சினை தீரும் அதேவேளை, மின்சார சக்தி சேகரிக்கப்படும் எனவும் மின்சார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post