நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளான 760 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 397 ற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 2வது அலையினால் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,107 ஆக அதிகரித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய தினம் 136 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், குறித்த மாவட்டத்தில் 1,804 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 50 புதிய தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,451 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக கண்டி மாவட்டமே அதிக பாதிப்புக்களை கொண்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது.
கொவிட் 2வது அலையினால் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000தை தாண்டியுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் 1033 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)