ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 18 நாடுகள் தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளன. எனினும் இந்தியா தனது முடிவை இதுவரை வெளியிடவில்லை.
இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் உதவியை கோரி இலங்கை அரசு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்தார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன,
“இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக இந்தியா இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் 18 நாடுகளில் இந்தியா இல்லை.
இந்த 18 நாடுகளைத் தாண்டி இந்தியாவும் இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.” என்று குறிப்பிட்டார்.
Discussion about this post