மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக, மத்திய மாகாணமே கொவிட் தொற்றினால் அதிக அச்சுறுத்தலான மாகாணமாக காணப்படுகின்றது.
மத்திய மாகாணத்தில் நேற்றைய தினம் (28) வரை 2,014 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 2ஆவது அலையினால் மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் வரை 29,725 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 17,491 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 3,315 தொற்றாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 8,919 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (TrueCeylon)
இந்த நிலையில், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டமே அதிக அச்சுறுத்தலான மாவட்டமாக காணப்படுகின்றது.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 1,515 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.(TrueCeylon)
நுவரெலியா மாவட்டத்தில் 381 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்தில் 118 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் இதுவரை 1,205 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.(TrueCeylon)
இரத்தினபுரி மாவட்டத்தில் 819 தொற்றாளர்களும், கேகாலை மாவட்டத்தில் 386 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. (TrueCeylon)