Tuesday, October 3, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home இலங்கை

வவுனியா துப்பாக்கி பிரயோக சர்ச்சை − இராணுவம் வெளியிட்ட பதில்

admin by admin
February 3, 2021
in இலங்கை, செய்திகள்
Reading Time: 1 min read
240
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

வவுனியா − செட்டிக்குளம் − பேராறு பகுதியில் இராணுவத்தின் மீது எவரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவிக்கின்றது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

வனப் பகுதியின் சம்பவம் நேர்ந்த இடத்திற்கு எவரும் செல்ல அனுமதிக்காத நிலையில், அங்கு சிலர் நடமாடியதை அவதானித்ததை அடுத்தே இராணுவத்தினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த மூன்று நபர்களும் ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையொன்றிற்காகவே அங்கு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயின், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன கூறினார்.

வவுனியா − செட்டிக்குளம் வனப் பகுதியில் மூன்று பேர் இராணுவத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்திருந்தது.

இதையடுத்து இராணுவம் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சம்பவத்தை எதிர்நோக்கியவர்கள், பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தவில்லை என அவர்கள் கூறியிருந்தனர்.

தம்மிடம் எந்தவொரு ஆயுதமும் அந்த சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், ட்ரூ சிலோன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளரை தொடர்புக்கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.(TrueCeylon)

Previous Post

உற்பத்தித் திறன் ஊதியத் திட்டத்திற்கு தொழில் அமைச்சர் பச்சைக்கொடி

Next Post

தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு – ரிஷாட் விடுத்த பகிரங்க கோரிக்கை

Next Post

தமிழர்களின் போராட்டத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு - ரிஷாட் விடுத்த பகிரங்க கோரிக்கை

Discussion about this post

Flash News

  • கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

    மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் குற்றச்சாட்டு – தீர்ப்பை அறிவித்தது அவுஸ்திரேலிய நீதிமன்றம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுபானசாலைகள் நாளை (03) பூட்டு

    0 shares
    Share 0 Tweet 0
  • BREAKING NEWS :- சினோபெக் எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • பூதாகரமாக வெடிக்கும் நீதிபதி விவகாரம்! ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு…

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved