வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post